General Knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
General Knowledge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

வளர்ந்து கொண்டே போகும் வீட்டு வாடகை! வாயை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீட்டு வாடகைகள் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மல மல வென உயர்ந்துள்ளது. நாம் சம்பாதிப்பது எல்லாம் வீட்டு வாடகைக்கு போய்விடும் என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு நகரங்களிலுமே வேலை வாய்ப்புகள் மற்றும் கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டு வாடகை ஆனது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் வீட்டு வாடகை ஆனது முற்றிலும் மாறுபடுகின்றன.புறநகர் பகுதிகளுக்கு வீட்டு வாடகை தனியாக மற்றும் பெருநகர் பகுதிகளில் அதற்கேற்றபடி தனித்தனியாக வீட்டு வாடகை எனது மாறுபடுகின்றன. 

பொதுவாக சிறிய வீடுகள் அதற்கேற்ற வாடகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றபடி அதற்கு ஒரு வாடகை என தனித்தனியாக உள்ளது. நாம் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சராசரி வாடகைகளை பற்றிய இந்த பதிவில் முழுவதும் காண்போம்! 

முதலில் சென்னையில் உள்ள வாடகை நிலவரத்தை பற்றி நாம் முழுவதும் பார்ப்போம்! இந்தப் பதிவில் சராசரி வாடகை நிலவரத்தை பற்றி பார்ப்போம்! 

  • 1BHK- ₹6000-₹15000 வரை 
  • 2BHK- ₹12000-25000 வரை 
  • 3BHK-₹20000-40000 வரை 

பிரபலமான பகுதியில் மாறுபடுகின்றன:

அண்ணா நகர்,வேளச்சேரி,நுங்கம்பாக்கம்,அடையார் போன்ற சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கும் பொழுது அதிக அளவு சம்பாதிக்க கூடிய ஒரு நபராக இருந்தால் நீங்கள் இந்த பகுதியில் போய் வாடகைக்கு வீடு இருக்கலாம். சென்னையில் அட்வான்ஸ் தொகையானது மூன்று மாதங்களுக்கு நீங்கள் கொடுப்பது போல் இருக்கும்.

இது போலவே சென்னையின் புறநகர் பகுதிகளில் வாடகை சிறிதளவு குறைவாக இருக்கும். சென்னையில் வாடகை வீடுகள் அதிக அளவில் இருந்தாலும் நல்ல வாடகை வீடு வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏற்ற வாடகை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு அவர்கள் வாடகைக்கு வீடு கொடுப்பார்கள்.

சென்னையில் உள்ள சிறிய வீடுகள்: 

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகள் ஓரளவிற்கு வாடகை குறைவாக இருக்கும் எனவே மலிவான விலையில் வாடகை வேண்டும் என்பவர்கள் சென்னையில் புறநகர் பகுதிகளில் வாடகை வீடுகள் பார்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை வாடகைகள் அவர்களுக்கு ஓரளவிற்கு ஏற்றவாறு கொண்டு இருக்கும். 

அடுக்குமாடி குடியிருப்புகள்:

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் படுக்கையறைக்கு ஏற்றார் போல் வாடகை மாறுபடும். இங்கு பராமரிப்பு மிகவும் சரியாக இருக்கும் நீங்கள் இதற்கு வாடகை ஒரு படுக்கையறை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் இரண்டு படுகைகளை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் மாறுபடும். 

தனி வீடுகள்: 

சென்னையில் தனி வீடுகள் வேண்டும் என்றாலும் கிடைக்கும் நீங்க வீடுகளில் அளவை பொறுத்து வாடகையானது வெவ்வேறாக இருக்கும் எனவே தனி வீடுகளும் இங்கு கிடைக்கின்றன.

பெங்களூரில் உள்ள சராசரி வாடகை நிலவரம்: 

  • 1BHK- ₹7000-₹18000 வரை 
  • 2BHK- ₹15000-29000 வரை 
  • 3BHK-₹30000-42000 வரை 

பிரபல பகுதிகளில்: 

ஒயிட் ஃபீல்ட்,மாரத்த ஹள்ளி,சர்ஜாபூர் சாலை,ஹெப்பல்,இந்திரா நகர் போன்ற முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த பகுதிகளில் வாடகை வீடு வேண்டும் என்றால் அதிக அளவு சம்பாதித்தால் மட்டுமே இங்கு தங்க உங்களுக்கு ஏற்றபடி இருக்கும் இது வாடகை வீடுகள் மிகவும் சிறப்பாகவும் கிடைக்கும்.

பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் வாடகை குறைவாகவும் பெரும்பாலான இடங்களில் மிகவும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகமாகவும் வேலை இல்லாத இடங்களில் மிகக் குறைவாகவும் வாடகை வீடுகள் கிடைக்கின்றன. இந்த பகுதிகளில் அட்வான்ஸ் தொகை இரண்டு மாதங்கள் கொடுக்கலாம் என சட்ட வரம்புகளும் உள்ளன.

சென்னை மற்றும் பெங்களூரு இந்த இரண்டு பகுதிகளிலும் உங்களுக்கு தனியாக அல்லது குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள பகுதிகளில் நீங்கள் தனியாக வீடு கட்டுவதற்கு இடமும் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. இங்கு அதிக அளவில் தமிழ் சினிமா பிரபலங்கள் வசிக்கும் இடங்களும் இருக்கின்றன. மேலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்பு கம்பெனிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.

ஒப்பந்தம்:

  • நீங்கள் இருநகரங்களிலுமே வீடுகளை வாடகை எடுக்கும் போது நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் ஏழுத்துப்பூர்வமான படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • அந்தப் படிவத்தில் வீட்டின் வாடகை தொகை மின்சார தொகை மற்றும் ஒப்பந்த தொகை தண்ணீர் தொகையில் என அனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் அடிக்கடி மாற்றிக்கொண்ட இருப்பார்கள்.
  • நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.

சென்னை மற்றும் பெங்களூரு இரண்டு நகரங்களிலும் அதிக அளவு சுற்றுலா இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் விடுமுறை நாட்களில் அதிக அளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்றபடி இரண்டு நகரங்களிலுமே சுற்றுலா தளங்கள் கோவில்கள் மற்றும் பல்வேறு வகையான திரு விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. 

நீங்கள் பெரிய பெரிய மாலுக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் ஏதாவது ஒரு பண்டிகை வந்தால் இங்கு மிகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் கிராமத்தில் இருந்து நகரத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அங்கு அதிக அளவு இயற்கை பகுதிகளை காண முடியாது இருந்தாலும் அதிக அளவு மக்கள் இந்தப் பகுதிகளில் சந்தோஷமாகவும் அழகாகவும் வாழ்ந்து வருகின்றனர். 

உங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் உடைகள் அனைத்தும் இங்கு குறைவான விலையிலும் அதிகமான விளைவிலும் இரண்டு நிலையிலும் உங்களுக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் பிள்ளைகள் படிப்பதில் மற்றும் விளையாடுவதில் சோம்பேறித்தனம் செய்கிறார்களா?இதோ சில யோசனைகள்!

படிப்பதிலும் மற்றும் விளையாடுவதிலும் உங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நீங்கள் அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் படிப்பதையும் விளையாடுவதையும் சரியான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கும் விதத்தில்தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அதை தான் பிள்ளைகள் செய்வார்கள் எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகள் இதில் அதிக திறமை பெற்றிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதற்கேற்றபடி நீங்கள் அவர்களுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

நீங்கள் கண்டிப்பதினாலோ அல்லது அடிப்பதினாலோ எந்த ஒரு பயனும் இல்லை எனவே நீங்கள் அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு அதை சரியான முறையில் பயிற்சி அளித்தால் மிகவும் நன்றாக பிள்ளைகள் வருவார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்!

படிப்பு: 

நீங்கள் பாடத்தினை அவர்களுக்கு மிகவும் தெளிவாகவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் அவர்களுக்கு விருப்பமில்லாத வகையில் கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை எனவே நீங்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடத்தினை மிகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் அழகாகவும் எளிய முறையிலும் பாடத்திட்டங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் இருக்கும் எனவே நீங்கள் அதை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.



மேலும் ஒரு மாணவருக்கு கணிதம் மிகவும் பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு படம் வரைதல் மிகவும் அதிகமாக பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் இருக்கும் எனவே நீங்கள் அதனை கண்டறிந்து மாணவர்களை ஊக்குவித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் அந்த செயலை செய்வார்கள்.

எனவே ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை என்ன திறமைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களை ஊக்குவியுங்கள். 

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சரியான கால அட்டவணைகள் கொடுக்க வேண்டும்.அவர்கள் சரியான நேரத்தில் காலையில் எழுவது முதல் இரவு படுக்கும் வரையில் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

நேரத்தை கடைபிடித்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் மென்மேலும் வளருவார்கள் எனவே நீங்கள் நேரத்தை வீணடிக்க பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள்.விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு அவர்கள் விருப்பம் போல் விட்டு விடுங்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு சிறிய வெற்றி பெற்றால் கூட அவர்களை நீங்கள் பாராட்டினால் அவர்கள் அதிக அளவு மகிழ்ச்சி பெற்று மென்மேலும் அதில் சாதிப்பதற்கு அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.

எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்கள் மீது தேவையற்ற சொற்களை அல்லது அடிப்பதையோ நிறுத்திவிட்டு நீங்கள் அவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்களை மகிழ்ச்சியாக இருக்க சொல்லுங்கள் இதன் மூலமாகவே மாணவர்கள் மிகவும் தெளிவாகவும் இருப்பார்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். 

விளையாட்டு: 

நீங்கள் உங்களது பிள்ளைகள் என்ன விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கண்டறிந்து நீங்கள் அதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் அந்த விளையாட்டில் அவர்கள் தோல்வியடைந்தால் கூட நீங்கள் அவர்களை மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்ய சொல்லுங்கள் கண்டிப்பாக அவர்கள் அதில் பெரிய வெற்றி காண்பார்கள்.

நீங்கள் உங்களது பிள்ளைக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் அனைத்தையும் நீங்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் உங்களது பிள்ளைகள் சரியாக தூங்குகிறார்களா என்பதை பார்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமே முதலில் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகுதான் அனைத்தும் எனவே நீங்கள் உங்களின் பிள்ளைகள் உடலின் ஆரோக்கியமே முக்கியம் என்பதை எடுத்து சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு தேவையான நடை பயிற்சி உடற்பயிற்சி அனைத்தையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் விளையாட்டுகளை விளையாடச் சொல்லித் தாருங்கள்.

பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நீங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து அவர்களுக்கு கொடுங்கள்.உங்களின் பிள்ளைகளை நேர்மறையாக யோசிக்க சொல்லுங்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான பாதைக்கு எடுத்துச் செல்லாதீர்கள் நீங்கள் அவர்களை நேர்மறையான எண்ணத்துடன் வளர்த்து வாருங்கள்.

அடிக்கடி சண்டை வர காரணம் இதுதானா? Reason of fighting

தமிழகத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டையானது வீதிக்கு வந்துள்ளது. ஒருவருக்கொருவர் வாக்குவாதம் மேற்கொண்டு இந்த சண்டையானது வீதி வரை வந்து அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருவரில் யாராவது ஒருவர் அமைதியாகும் வரை இருவரின் குரலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுப்பதில்லை.

ஒருவர் பேசினால் அது என்னவென்று கூட தெரியாமல் அதற்கு மாறாக என்ன பேச வேண்டும் என்பது மற்றவர்களின் நினைவில் இருக்கின்றன. ஆனால் ஒருவர் கூறும் பொழுது அதை இன்னொருவர் என்ன கூறுகிறார் என்று யோசித்து ஒரு நிமிடம் கழித்து பதில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும். ஆனால் இதற்கு மாறாகவே நடக்கின்றன. இருவரின் யார் பெரியவர் என்று போட்டி போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். சுற்றியுள்ள வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்க மாட்டார்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சண்டையில் காரணங்கள் என்பது மனித உறவுகளில் ஏற்படக்கூடிய ஒருவருக்கொருவர் உள்ளே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உணர்ச்சி வெடிப்புகள் சுழ்நிலை சிக்கல்களில் ஏற்படும் விளைவுகள்.

பொதுவான காரணங்கள்: 

தவறான வார்த்தை: ஒருவர் பேச்சானது இன்னொருவருக்கு அவமதிப்பாக இருந்தால் அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான செயல்: ஒருவர் மற்றொருவரிடம் தவறான செயல்கள் மேற்கொண்டால் இதன் மூலமும் சண்டை உருவாக காரணமாக உள்ளது.

பழைய சிக்கல்கள்: தீர்க்கப்படாத பழைய சிக்கல்கள் மூலமும் புதிதாக சண்டை உருவாக காரணமாக உள்ளது. 

தனிப்பட்ட பிரச்சனைகள்: பணம் வேலையின் அழுத்தம் மற்றும் குடும்ப சூழ்நிலை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதன் மூலம் சண்டை உருவாகிறது. 

உணர்ச்சிக் கட்டுப்பாடு: 

நமது கோபம் வருத்தம் பொறாமை போன்றவைகள் நாம் கட்டுப்படுத்தாமல் இருப்பதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான புரிதல்: ஒருவர் கூறும் வார்த்தை அல்லது செயல் மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

கருத்து வேறுபாடு: ஒருவர் கூறுவது நான் கூறுவது சரி என்று அவர் கூறுவார் இன்னொருவர் நான் கூறுவது தான் சரி என்று கூறுவார் இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி சண்டை உருவாக காரணமாக உள்ளது.

உறவுகளில் சண்டை காரணங்கள் : 

உறவினர்களின் நல்ல விசேஷ காலங்களில் பணமும் பொருளும் கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு பூர்த்தியாகவில்லை என்றால் இதனை காரணமாக கொண்டும் சண்டை செய்வார்கள். 

கணவன் அல்லது மனைவி தனது குழந்தையினை சரியாக கவனிக்கவில்லை என்றால் இதன் மூலமும் இருவருக்கிடையில் சண்டை வருவதாக காரணமாக உள்ளது.

சரியான நேரம் ஒதுக்காத காரணத்தின் மூலமும் உறவுகளில் சண்டை ஏற்படுகிறது. 

பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றி உறவுகளில் சண்டை உருவாகிறது. 

மனநிலை மாற்றங்களால் கூட உறவுகளில் சண்டை ஏற்படுகிறது.

சில நபர்கள் மற்றவர்கள் பார்ப்பது கூட தெரியாமல் அதிக தீய சொற்களை பயன்படுத்தி மிகவும் மோசமாக பேசுவார்கள்.ஆனால் என்ன சண்டை என்று அவருக்கே தெரியாத அளவிற்கு அவருடைய சொற்கள் இருக்கும். இருவரின் வாய் அடங்கும் அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுக்காத அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். சுற்றிப் பார்ப்பவர்கள் அனைவரும் என்னடா இவர்களை எப்பொழுது அடித்து மற்றவர்கள் என்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள். 

சண்டை போடுபவர்கள் ஒருவராவது நாம் செய்வது சரியா நாம் பேசுவது சரியா என்று ஒரு நிமிடம் யோசித்தால் அந்த சண்டை ஆனது நிளாமல் இருக்கும். பெரும்பாலும் வேறு ஒருவரின் பேச்சை கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட காரணமாக அமைகிறது. எனவே அவரவர் வேலையை சரியாக செய்தால் சண்டை வர காரணமாக அமையாது. 

எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். வன்முறையால் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் ஒருவர் ஒருவர் உதவி செய்து மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை போட்டுக் கொள்பவர்களை நாம் நல்வழிப்படுத்தி அவர்களை திருத்தி நாம் அவர்களுக்கு வாழ்க்கையின் புரிதலை பற்றி நன்கு கூற வேண்டும். சண்டைக்கு முக்கிய காரணம் நாம் பேசுவது அதிகமாக இருப்பதால் தான் எனவே நீங்கள் பேசும் வார்த்தைகள் சரியானதா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

வியாழன், 22 மே, 2025

படைப்பாற்றலின் முக்கியத்துவமும் தேவையும் | The importance and need for creativity

 படைப்பாற்றல் வெளிப்படும் சூழல்கள்:

ஒன்றைப் பார்க்கும் பார்வையும், உணரும் முறையும்தான் படைப்பையும் படைப்பாளரையும் உருவாக்குகிறது.

நெகிழும் நெஞ்சம் கொண்டவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பாதிப்பு அடைபவர்கள், பிறரது உள்ளத்தைக்கூட ஆழமாக உற்றுப்பார்த்து தெரிந்தவர்கள். கற்பனைத்திறன் மிகுந்தவர்கள் படைப்பாளர்களாகப் பரிணமிக்கிறார்கள்.

"ஒரு வாசகர் தனது தீவிர வாசிப்பால் மிகச் சிறந்த படைப்புகளோடு, மோதல்கள் நிகழ்த்துவதால், படைப்பு ஊற்றுக்கண் திறக்கிறது. வாசகரும் படைப்பாளியாக மாறுகிறார்" என்கிறார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

கல்லை எல்லோரும் பார்க்கிறார்கள். படைப்பாளர் மட்டும் அதற்குள் சிலையைப் பார்க்கிறார், சிற்பியாகிறார்.

ஒருமுறை கன்னியாகுமரி கடற்கரையிலே, ஒரு வசதியான வட இந்திய மனிதர் இளநீர் குடித்துவிட்டு, எறிந்துவிட்டுப் போனார்.

சற்று அப்பால் அமர்ந்திருந்த ஒரு சீன நாட்டுப் பெண் அதை எடுத்து, நார் நாராக உரித்து எடுத்தார். சிரட்டையும் சிறிது நாருமாக இருந்த உள்பாகத்தைச் சிறிய கத்தியால் வடிவமாற்றம் செய்தார்.

ஏற்கனவே உரித்து வைத்திருந்த நாரை ஆங்காங்கே திணிக்கவும், பின்னல் போட்டுச் சுற்றவும் செய்தார்.

'எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய்' கடைக்குப் போய், ஆறு நிறம்கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் 'பெயின்டை' வாங்கி வந்தாள். பதினைந்தே நிமிடத்தில் ஓர் ஆணும், பெண்ணும் கைகுலுக்குவது போன்ற படைப்பை உருவாக்கினார். அருகில் இருந்த சுவரில் வைத்து அழகு பார்த்தார். பலரும் பார்த்துப் பாராட்டினர்.

இளநீரைக் குடித்து எறிந்துவிட்டு, புண்ணியத் தலங்களுக்குப் போய்த் திரும்பிய வட இந்தியப் பயணியும் அதை வேடிக்கை பார்த்தார். "அழகாக இருக்கிறதே, எங்கு வாங்கினீர்கள்?" என்று அப்பெண்ணிடம் வினவினார். புன்னகைத்த அப்பெண்ணோ. "உங்களுக்கு வேண்டுமானால் இருநூறு ரூபாய்க்குத் தருகிறேன்" என்றார். அவர் பேசாமல் இருநூறு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சென்றார்.

ஒருவர் குப்பையில் எறிந்தது ஒரு படைப்பாளியின் கையில் கிடைத்தபோது, அது மாபெரும் கலைப் படைப்பாக உருவெடுத்து விடுகிறது. ஆகாது என்று ஒதுக்கப்பட்ட மனிதர்கள் கூட, நல்ல சிற்பிகளின் செதுக்குதல்களால் படைப்பாளர்களாகப் பரிணமிக்க முடியும்.

மேலும் படைப்பாற்றல் என்பது புதிய யோசனைகள் பொருட்களை உருவாக்கும் திறன் மற்றும் நம்முடைய புதிய கருத்துக்கள் ஆகும். இது மனிதர்களின் சிந்தனை திறன் ஆற்றல் மற்றும் பிரச்சனைகளை எதிர்களும் திறன் போன்றவை வெளிப்பாடாகும். பழைய பாடல் என்பது வாழ்க்கையின் பல துறைகளிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இது மனிதர்களின் ஐந்து அறிவுத்திறன் கற்பனைத் திறன் புதிதாக யோசிக்கும் திறன் ஆகும். இது சமூக வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்? 

  • படைப்பாற்றலை நாம் கலை மற்றும் இலக்கியத்தில் பயன்படுத்தலாம். 
  • பொறியியல் மற்றும் அறிவியலில் பயன்படுத்தலாம். 
  • வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் பயன்படுத்தலாம்.
  • கல்வி மற்றும் அதற்கான பயிற்சியில் பயன்படுத்தலாம். 
  • தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தலாம். 
  • புதிதாக எழுத்து திறனின் நாம் பயன்படுத்தலாம். 

எப்படி படைப்பாற்றலை வளர்ப்பது?

  • நாம் புதிதாக புத்தகங்களை படிக்க வேண்டும் மற்றும் சிறுகதைகள் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நாம் படித்து படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
  • நாம் அனைவரிடமும் கேள்வி எழுப்ப வேண்டும் ஏன் எப்படி எப்படி வந்தது என சிந்தித்து அனைவரிடமும் கேள்வி கேட்க வேண்டும். 
  • நம் மனதில் தோன்றும் கற்பனைகள் கவிதைகள் குறிப்புகள் கதைகள் போன்றவற்றை நீங்கள் எழுத்தாக எழுத வேண்டும். 
  • ஓவியம் இசை மற்றும் கைத்தொழில் போன்றவற்றில் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். 
  • நீங்கள் அனைத்திலும் பழையதை ஒதுக்கி புதிய வழியில் அனைத்தையும் யோசிக்க வேண்டும். 
  • நீங்கள் இயற்கையை கலாச்சாரம் புதிய மனிதர்கள் போன்றவற்றை புதிதாக பார்க்க வேண்டும் அதிகமாக சுற்றுலா செல்ல வேண்டும் புதிய புதிய இடத்தை பார்க்க வேண்டும் மேலும் நீங்கள் அதிக அனுபவம் பெற வேண்டும். 
  • நீங்கள் அனைவரும் குழுவாக செயல்படும் பது உங்களுக்கு புதிய புதிய யோசனைகள் பிறக்கும்.
  • உங்களுக்கு வரும் பிரச்சனைகளை சிக்கல்களை புதுமையான முறையில் கையாண்டு அதை சுலபமாக தீர்க்க வேண்டும். 
  • நீங்கள் உங்களின் தனிப்பட்ட திறமைகளை அனைத்திலும் வெளிப்படுத்த வேண்டும். 
  • நீங்கள் புதிய புதிய தொழில்களை உருவாக்க வேண்டும் அதில் கடுமையாக உழைத்து சாதிக்க வேண்டும். 
  • வாழ்க்கையில் இதன் பயன்பாடு: 
  • மாணவர்கள் அனைவரும் பாடங்களை புதுமையாக புரிந்து கொள்ள வேண்டும் பரிட்சை எழுத வேண்டும். 
  • ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பில் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்க வேண்டும் அவர்களுக்கு ஆர்வம் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் இவர்களுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும்.
  • தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். 
  • மருத்துவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தால் அதிகளவு மனிதர்களுக்கு மருத்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்.

நினைவாற்றலின் தேவைகள் மற்றும் வகைகள் | Requirements and types of memory

 நினைவாற்றலின் தேவைகள் :

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் . நம் மொழித்தாளில் மனப்பாடச் செய்யுள், வரலாற்றில் ஆண்டுகள். பெயர்கள், ஒப்பந்தங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள். இடங்கள். நிலவியல், கனிமங்கள், இயற்கை வளங்கள், அறிவியல் பதங்கள். 

தாவரங்களின் அறிவியல் பெயர்கள், அறிவியல் கோட்பாடுகள், தொழில் நுணுக்க விளக்கங்கள், கணிதத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றை நினைவில்கொண்டு. தேர்வில் எழுத வேண்டியிருக்கின்றது.

அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் செய்ய வேண்டிய வேலைகள், நம் நண்பர்களின் பெயர்கள் மற்றும் கடையில் பொருள்கள் வாங்கச் செ செல்லும் போது அவற்றின் பெயர்கள் போன்றவற்றை நினைவில் கொள்வது அவசியமாகின்றது.

ஆனால் மறதி ஒரு பெரும் தடையாக நமக்கு இருக்கின்றது. உண்மையைச் சொல்லப்போனால், மறதி என்ற ஒரு குறைபாடு பலருக்குக் கிடையாது, மருத்துவரீதியாக சிலருக்கு அந்தக் குறைபாடு இருக்கலாம்.

ஆனால், அனைவருக்குமே போதுமான நினைவாற்றல் இருக்கின்றது. ஆகவே, நம் வெற்றியும், தோல்வியும் நமக்கு எவ்வளவு நினைவாற்றல் உள்ளது என்பதைப் பொறுத்து அல்ல; நம் நினைவாற்றலை நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம். என்பதைப் பொறுத்துதான் அமையும்.

ஆகவே, நம் நினைவாற்றலை வளர்க்கவும், பாடங்களை எளிதில் மனதில்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றவும் தொடங்கிவிட்டால், உங்களுக்கு எதிலும் வெற்றிதான்.

நினைவாற்றல் என்பது ஒரு மனிதன் பார்க்கக் கூடியதும் கேட்கக் கூடியது மற்றும் அவன் அனுபவிக்க கூடியதும் அனைத்தையும் அவனது மூளையில் பதிய வைத்து தேவைப்படும் நேரத்தில் நினைவாற்றல் ஆகும்.

மூவகை நினைவாற்றல் :

1. சில நபர்கள் தாங்கள் கேட்பதை அதிக காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள். சிலர் தாங்கள் பார்ப்பதை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள்.

2. பாடங்களைக் கற்கும்போது பார்த்தல், கேட்டல் என்ற இரு நிலைகளில் நாம் அதிகம் அறிகின்றோம்.

3. சிலர் தாங்கள் உணர்வுப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதை நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்கின்றார்கள். நாம் நம் உறவுகளை, நண்பர்களை அதிகம் நினைவில் கொள்வது இந்த உணர்வு நிலை நினைவாற்றலில்தான்.

இந்த மூன்றுவகை நினைவாற்றலும் அவரவரின் மன மற்றும் அறிவு ஆளுமையைப் பொறுத்து வேறுபடும்.

உங்களுக்கு இதில் எந்த வகையான நினைவாற்றல் அதிகம் இருப்பதாக நினைக்கின்றீர்களோ, அதை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால் உங்கள் நினைவாற்றல் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தரும்.

நினைவாற்றலின் தேவைகள்:

  • கல்வியில் நீங்கள் படிக்கும் அனைத்தையும் எதையும் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதற்கு நினைவாற்றல் தேவை.
  • உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் தேவைப்படும் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • நீங்கள் அதிகளவில் நினைவாற்றல் வைத்திருப்பதன் மூலம் மூளை ஆனது மிகவும் திறமையாக செயல்பட்டு வேலை மற்றும் படிப்பதற்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
  • நீங்கள் தொடர்ந்து ஒரே விஷயத்தில் அதிகம் காணும் செலுத்தினால் அது உங்களுக்கு அதிக அளவு நினைவில் வைத்துக் கள்ள உதவுகிறது.
  • உங்கள் மனநிலை மிகவும் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 
  • உங்களின் நினைவாற்றலானது நீங்கள் ஏதாவது தவறு தவறு செய்தால் அதை நினைவுபடுத்தி மறுபடியும் அந்த தவறுகளை செய்ய தவிர்க்கப்படுகிறது. 
  • நீங்கள் பிறருடைய பெயர் அந்த நாள் சம்பவங்கள் போன்றவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள நினைவாற்றல் அதிக அளவில் தேவைப்படுகிறது. 
  • நீங்கள் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு நினைவாறறல் அதிகரிக்கும்.

நினைவாற்றலுக்கு உதவும் செயல்கள்: 

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்: 

நீங்கள் தவறு செய்யும் போது அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி தவறுகளை நீங்கள் திருத்த முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் பயிற்சி: 

நீங்கள் அதிக அளவு திரும்பத் திரும்ப ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் மற்றும் வேலை செய்வதின் மூலமும் உங்களுக்கு அந்த விஷயமானது ஆழமான அளவில் மனதில் பதிக்கப்படுகிறது.

உறக்கம்: 

  • நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்குவதன் மூலம் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
  • இது நினைவாற்றலுக்கு முக்கியமாக உள்ளது. 

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவுகள்: 

வல்லாரைக் கீரை நெல்லிக்காய் முந்திரி பாதாம் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 

தியானம்: 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தால் உங்களுக்கு மன கழப்பம் குறைகிறது மற்றும் இது அதிகளவு உங்களுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.


புதன், 21 மே, 2025

நினைவாற்றலை உணர்த்தும் அருமையான கதை | Power Of Memory Mind

தென்புறம் என்றோர் அழகிய கிராமத்தில் ராஜதுரை எனும் பண்ணையார் இருந்தார். அவரது மகனின் பெயர் அருண். அருணின் வகுப்புத் தோழன் ராஜா. இருவரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். ராஜாவின் தந்தை முத்தையா. பண்ணையார் ராஜதுரையின் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.

காலாண்டுத் தேர்வில் ராஜா முதல் மதிப்பெண் பெற்றதை அறிந்து, பண்ணையார் பொறாமை கொண்டார். ஆகவே அவர் முத்தையாவை அழைத்து. "உன் மகனுக்கு என்ன சாப்பாடு கொடுக்கின்றாய்? அவன் வகுப்பில் முதலிடத்தில் இருக்கிறானாமே!" என்று கேட்டார்.

அதற்கு முத்தையா. "ஐயா, நீங்கள் எனக்குச் சம்பளமாக கொடுக்கும் உங்கள் வயலில் விளையும் தானியங்களும், காய்கறிகளும், கீரையும்தான்" என்று பணிவாகக் கூறினார். கோபம் கொண்ட பண்ணையார், "இனி நீ என் வயலில் உள்ள தானியப் பயிர்கள், காய்கறி, கீரைகள் எதையும் உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. கூலியாகப் பணம் மட்டும் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டார்.

பண்ணையார் தன் மகன் அருணுக்கு தன் தோட்டத்தில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், கீரையையும் அதிகமாகக் கொடுத்துப் பார்த்தார். ஆனால், அவன் படிப்பில் சிறிதும் முன்னேறவில்லை.

ஏனென்றால் அருணிடம் ஒரு கணினி இருந்தது. எப்போதும் அதில் ;வீடியோ கேம்ஸ்'. சமூக வலைத்தளங்கள் என அவன் நேரத்தை வீணாக்கியதால், தன் பாடப் புத்தகங்களைச் சுமையாக நினைத்தான். கவனமில்லாமல் படித்துக் கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, அரையாண்டுத் தேர்வுகள் வந்தன. ராஜா தேர்வுகளை அமைதியாக எழுதிக்கொண்டிருந்தான். ஆனால். அருணுக்குப் படித்தவை எதுவும் நினைவிற்கு வரவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் பாதியிலே மறந்து போயின. தேர்வறையிலே அழ ஆரம்பித்து விட்டான்.

இதைக் கண்ட ராஜா அருணுக்கு உதவ முன்வந்தான். அவன் அருணை தனியே அழைத்து, "நம் அனைவருக்கும் போதுமான நினைவாற்றலை கடவுள் தந்திருக்கின்றார். நாம் அதை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றிதான்" என்று கூறி. பாடத்தை நினைவில்கொள்ள கடைப்பிடிக்கும் முறைகளை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தான்.

அடுத்த இரண்டு மாதங்களில் அருணின் நினைவாற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அரசுப் பொதுத்தேர்வுக்குத் தயாரானான். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியும் பெற்றான்.

தான் பொறாமையால் முத்தையாவை வஞ்சித்தாலும், அவர் மகன் ராஜா அருணுக்கு உதவியதை நினைத்துப் பண்ணையார் மனம் நெகிழ்ந்தார். தன் தவறுக்காக வருந்தினார். மகிழ்ச்சியோடு முத்தையாவை, தன் பண்ணை முழுவதற்கும் கண்காணிப்பாளராக மாற்றினார். ராஜாவின் மேற்படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார். இரு குடும்பங்களும் மகிழ்ந்தன.

இந்த கதையின் மூலம் நினைவுகள் ஒருவருக்கு எந்த அளவு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.எனவே உங்களுக்கு வாழ்க்கையில் தோன்றும் சிறு சிறு நியாபகங்கள் நினைவுகள் அனைத்தையும் நீங்கள் உங்களின் மூளையில் சேகரித்துக் கொண்டு வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு டைரியிலோ அல்லது புத்தகத்தில் நீங்கள் அதை எழுதி வைக்க வேண்டும். 

நீங்கள் வாழ்க்கையில் நடந்த சிறு சிறு ஞாபகங்கள் மற்றும் வாழ்க்கையில் நடந்த சில விபத்துக்கள் மற்றும் மகிழ்ச்சி தருணங்கள் அனைத்தையும் நீங்கள் எழுதி வைக்க வேண்டும்.அதை மீண்டும் படிக்கும் பொழுது உங்களுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வருகிறது.எனவே அனைத்தையும் ஒரு புத்தகத்தில் நன்கு விரிவாக எழுதிக் கொள்ள வேண்டும். 

ஞாபகங்கள் தான் நமது வாழ்க்கையில் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.எனவே அனைவரும் படிப்பதில் அல்லது உங்கள் செயல்பாடுகளில் நீங்கள் நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும்.ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களுக்கு ஒரு வயதான காலத்தில் நினைவுக்கு வரும் எனவே அனைவரும் நேர்மையான எண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவாற்றலுக்கு உதவும் செயல்கள்: 

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்: 

நீங்கள் தவறு செய்யும் போது அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி தவறுகளை நீங்கள் திருத்த முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் பயிற்சி: 

நீங்கள் அதிக அளவு திரும்பத் திரும்ப ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் மற்றும் வேலை செய்வதின் மூலமும் உங்களுக்கு அந்த விஷயமானது ஆழமான அளவில் மனதில் பதிக்கப்படுகிறது.

உறக்கம்: 

  • நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்குவதன் மூலம் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
  • இது நினைவாற்றலுக்கு முக்கியமாக உள்ளது. 

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவுகள்: 

வல்லாரைக் கீரை நெல்லிக்காய் முந்திரி பாதாம் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 

தியானம்: 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தால் உங்களுக்கு மன கழப்பம் குறைகிறது மற்றும் இது அதிகளவு உங்களுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

தற்போது அழிந்து வரும் பறவை இனம் எது? Which bird species is currently endangered?

தற்போது அழிந்து வரும் பறவை இனங்கள் தமிழ்நாட்டில் மற்றும் இந்திய அளவில் பல பறவை இனங்கள் இருக்கின்றது. நடப்பாண்டில் மட்டும் நடந்த கணக்கெடுப்பில் 37 வகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் சுற்றுச்சூழலை சமநிலையை பேணி காப்பதற்கு முக்கிய பங்கு வைத்து வருகிறது. அவற்றை நாம் பாதுகாத்து வரவேண்டும். 

பறவைகளை சரணாலயங்கள் மற்றும் வனத்துறை கண்காணிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு மூலம் நாம் இதனை பாதுகாத்து வர வேண்டும். இல்லையென்றால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவு ஆபத்துகள் ஏற்படும். தற்போது உலகம் முழுவதும் பறவையினங்கள் அழிந்து வருதல் அதிகமாகிறது இது கவலைக்கிடமான நிலைக்கு நம்மை தள்ளப்படுகின்றன.

பறவைகளின் அழிவிற்கான காரணங்கள்: 

  • நகரமயமாக்கல்,விவசாயம் மற்றும் காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் பறவைகளின் வாழிடம் அழிக்கப்படுவதால் பறவை தினமும் அழிந்து வருகிறது. 
  • காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றங்களால் பறவையின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.இதனால் பறவையின் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. 
  • காற்று மாசுபாடு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக மனித நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. 
  • மின்கம்பிகள் மற்றும் சில ஒயர்களால் பறவைகள் மோதுவதன் மூலம் பறவைகளுக்கு உயிர் இழப்பும் ஏற்படுகிறது.இதனால் பறவையை நாங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது.

பாதுகாப்பதற்கான சில நடவடிக்கை: 

  • மத்திய அரசானது "பஸ் ஸ்ராப் பாதுகாப்பு திட்டம்" என்ற திட்டத்தினை வனத்துறை மூலமாக நடைமுறைப்படுத்தியது. 
  • பறவைகள் மின் கம்பங்களில் மோதுவதை தவிர்ப்பதற்காக மின்கோடுகளை நிலத்தடியில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
  • திருநெல்வேலி பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட நிலங்களை அமைப்பதற்காக பாதுகாப்பான உயிரியல் பூங்காக்கள் அமைத்தல். 
  • முட்டையை எடுத்து பராமரிக்கும் செயற்கை வளர்ப்பு முறைக்காக இனப்பெருக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • உள்ளூர் மக்களை பறவைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் சிட்டு குருவி இனம் தான் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும். 

உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.


2 சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு 3 நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத்தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

தானியங்கள். புழுபூச்சிகள், மலர் அரும்புகள். இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும்.

 அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டால் என்று கூறுகிறோம். பறவைகளை நாம் பாதுகாப்பதன் மூலம் உனது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அதிக நன்மைகளை பறவைகள் குறித்து வருகிறது பறவைகளால் தான் சுற்றுச்சூழல் அதிக அளவில் இருக்கிறது இல்லையென்றால் மரங்கள் செடிகள் கொடிகளின் எண்ணிக்கை எப்போது குறைந்திருக்கும் எனவே நீங்கள் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றால் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆணித்தனமாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே பறவைகளை நாம் பாதுகாத்து வர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் :

  • மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
  • நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
  • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.
  • சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
  • உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.