செவ்வாய், 22 ஜூலை, 2025

அடிக்கடி சண்டை வர காரணம் இதுதானா? Reason of fighting

தமிழகத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டையானது வீதிக்கு வந்துள்ளது. ஒருவருக்கொருவர் வாக்குவாதம் மேற்கொண்டு இந்த சண்டையானது வீதி வரை வந்து அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருவரில் யாராவது ஒருவர் அமைதியாகும் வரை இருவரின் குரலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுப்பதில்லை.

ஒருவர் பேசினால் அது என்னவென்று கூட தெரியாமல் அதற்கு மாறாக என்ன பேச வேண்டும் என்பது மற்றவர்களின் நினைவில் இருக்கின்றன. ஆனால் ஒருவர் கூறும் பொழுது அதை இன்னொருவர் என்ன கூறுகிறார் என்று யோசித்து ஒரு நிமிடம் கழித்து பதில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும். ஆனால் இதற்கு மாறாகவே நடக்கின்றன. இருவரின் யார் பெரியவர் என்று போட்டி போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். சுற்றியுள்ள வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்க மாட்டார்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சண்டையில் காரணங்கள் என்பது மனித உறவுகளில் ஏற்படக்கூடிய ஒருவருக்கொருவர் உள்ளே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உணர்ச்சி வெடிப்புகள் சுழ்நிலை சிக்கல்களில் ஏற்படும் விளைவுகள்.

பொதுவான காரணங்கள்: 

தவறான வார்த்தை: ஒருவர் பேச்சானது இன்னொருவருக்கு அவமதிப்பாக இருந்தால் அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான செயல்: ஒருவர் மற்றொருவரிடம் தவறான செயல்கள் மேற்கொண்டால் இதன் மூலமும் சண்டை உருவாக காரணமாக உள்ளது.

பழைய சிக்கல்கள்: தீர்க்கப்படாத பழைய சிக்கல்கள் மூலமும் புதிதாக சண்டை உருவாக காரணமாக உள்ளது. 

தனிப்பட்ட பிரச்சனைகள்: பணம் வேலையின் அழுத்தம் மற்றும் குடும்ப சூழ்நிலை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதன் மூலம் சண்டை உருவாகிறது. 

உணர்ச்சிக் கட்டுப்பாடு: 

நமது கோபம் வருத்தம் பொறாமை போன்றவைகள் நாம் கட்டுப்படுத்தாமல் இருப்பதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான புரிதல்: ஒருவர் கூறும் வார்த்தை அல்லது செயல் மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

கருத்து வேறுபாடு: ஒருவர் கூறுவது நான் கூறுவது சரி என்று அவர் கூறுவார் இன்னொருவர் நான் கூறுவது தான் சரி என்று கூறுவார் இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி சண்டை உருவாக காரணமாக உள்ளது.

உறவுகளில் சண்டை காரணங்கள் : 

உறவினர்களின் நல்ல விசேஷ காலங்களில் பணமும் பொருளும் கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு பூர்த்தியாகவில்லை என்றால் இதனை காரணமாக கொண்டும் சண்டை செய்வார்கள். 

கணவன் அல்லது மனைவி தனது குழந்தையினை சரியாக கவனிக்கவில்லை என்றால் இதன் மூலமும் இருவருக்கிடையில் சண்டை வருவதாக காரணமாக உள்ளது.

சரியான நேரம் ஒதுக்காத காரணத்தின் மூலமும் உறவுகளில் சண்டை ஏற்படுகிறது. 

பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றி உறவுகளில் சண்டை உருவாகிறது. 

மனநிலை மாற்றங்களால் கூட உறவுகளில் சண்டை ஏற்படுகிறது.

சில நபர்கள் மற்றவர்கள் பார்ப்பது கூட தெரியாமல் அதிக தீய சொற்களை பயன்படுத்தி மிகவும் மோசமாக பேசுவார்கள்.ஆனால் என்ன சண்டை என்று அவருக்கே தெரியாத அளவிற்கு அவருடைய சொற்கள் இருக்கும். இருவரின் வாய் அடங்கும் அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுக்காத அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். சுற்றிப் பார்ப்பவர்கள் அனைவரும் என்னடா இவர்களை எப்பொழுது அடித்து மற்றவர்கள் என்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள். 

சண்டை போடுபவர்கள் ஒருவராவது நாம் செய்வது சரியா நாம் பேசுவது சரியா என்று ஒரு நிமிடம் யோசித்தால் அந்த சண்டை ஆனது நிளாமல் இருக்கும். பெரும்பாலும் வேறு ஒருவரின் பேச்சை கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட காரணமாக அமைகிறது. எனவே அவரவர் வேலையை சரியாக செய்தால் சண்டை வர காரணமாக அமையாது. 

எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். வன்முறையால் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் ஒருவர் ஒருவர் உதவி செய்து மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை போட்டுக் கொள்பவர்களை நாம் நல்வழிப்படுத்தி அவர்களை திருத்தி நாம் அவர்களுக்கு வாழ்க்கையின் புரிதலை பற்றி நன்கு கூற வேண்டும். சண்டைக்கு முக்கிய காரணம் நாம் பேசுவது அதிகமாக இருப்பதால் தான் எனவே நீங்கள் பேசும் வார்த்தைகள் சரியானதா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

Comments


EmoticonEmoticon