நினைவாற்றலின் தேவைகள் :
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் . நம் மொழித்தாளில் மனப்பாடச் செய்யுள், வரலாற்றில் ஆண்டுகள். பெயர்கள், ஒப்பந்தங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள். இடங்கள். நிலவியல், கனிமங்கள், இயற்கை வளங்கள், அறிவியல் பதங்கள்.
தாவரங்களின் அறிவியல் பெயர்கள், அறிவியல் கோட்பாடுகள், தொழில் நுணுக்க விளக்கங்கள், கணிதத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றை நினைவில்கொண்டு. தேர்வில் எழுத வேண்டியிருக்கின்றது.
அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் செய்ய வேண்டிய வேலைகள், நம் நண்பர்களின் பெயர்கள் மற்றும் கடையில் பொருள்கள் வாங்கச் செ செல்லும் போது அவற்றின் பெயர்கள் போன்றவற்றை நினைவில் கொள்வது அவசியமாகின்றது.
ஆனால் மறதி ஒரு பெரும் தடையாக நமக்கு இருக்கின்றது. உண்மையைச் சொல்லப்போனால், மறதி என்ற ஒரு குறைபாடு பலருக்குக் கிடையாது, மருத்துவரீதியாக சிலருக்கு அந்தக் குறைபாடு இருக்கலாம்.
ஆனால், அனைவருக்குமே போதுமான நினைவாற்றல் இருக்கின்றது. ஆகவே, நம் வெற்றியும், தோல்வியும் நமக்கு எவ்வளவு நினைவாற்றல் உள்ளது என்பதைப் பொறுத்து அல்ல; நம் நினைவாற்றலை நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம். என்பதைப் பொறுத்துதான் அமையும்.
ஆகவே, நம் நினைவாற்றலை வளர்க்கவும், பாடங்களை எளிதில் மனதில்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றவும் தொடங்கிவிட்டால், உங்களுக்கு எதிலும் வெற்றிதான்.
மூவகை நினைவாற்றல்
1. சில நபர்கள் தாங்கள் கேட்பதை அதிக காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள். சிலர் தாங்கள் பார்ப்பதை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள்.
2. பாடங்களைக் கற்கும்போது பார்த்தல், கேட்டல் என்ற இரு நிலைகளில் நாம் அதிகம் அறிகின்றோம்.
3. சிலர் தாங்கள் உணர்வுப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதை நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்கின்றார்கள். நாம் நம் உறவுகளை, நண்பர்களை அதிகம் நினைவில் கொள்வது இந்த உணர்வு நிலை நினைவாற்றலில்தான்.
இந்த மூன்றுவகை நினைவாற்றலும் அவரவரின் மன மற்றும் அறிவு ஆளுமையைப் பொறுத்து வேறுபடும்.
உங்களுக்கு இதில் எந்த வகையான நினைவாற்றல் அதிகம் இருப்பதாக நினைக்கின்றீர்களோ, அதை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால் உங்கள் நினைவாற்றல் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தரும்.