குடிநோய் பற்றிய தெளிவான விளக்கம் | Explanation of addiction Alcohols

குடிநோய் என்பது ஒருவர் அடிக்கடி மதுவை கட்டுப்பாடு இன்றி அருந்தும் பழக்கத்தால் உருவாகும் ஒரு மனநல கோளாறு ஆகும் இது மனிதனின் உடல் மனம் மற்றும் அவர்களின் குடும்பம் சமூக வாழ்க்கையை அதிகமாக பாதிக்கிறது. இந்த குடிப்பழக்கத்தால் அதிகளவு கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் என்பத மனித உடலின் ஒரு முக்கியமாக செயல்படக்கூடிய ஒரு உறுப்பாகும்.

எப்படி கண்டறிவது? 

குடிநோய் பிடித்தவர்கள் அவர்களை எவ்வளவு அடக்கினாலும் அவர் திரும்பத் திரும்ப குடிப்பதற்கு சென்று கொண்டே இருப்பார்.குடிநோய் மாணவர்கள் அவரின் சுய நிலை இயந்து கட்டுப்பாடு இன்றி தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பார். இவர்கள் பெரும்பாலும் குடியை நிறுத்தும் போது உடல் மற்றும் மன விலகல் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் கொண்டு நாம் கண்டறியலாம்.

இவர்கள் பெரும்பாலும் அதிக அளவு குடித்தால் மட்டுமே அவர்களுக்கு போதை ஏறும்.இப்படிப்பட்டவர்கள் அதிக அளவு குடி நோய்க்கு அடிமையானவர்கள். 
அவர் குடித்த பிறகு அவருக்கு ஒருபிரச்சனைக்கு சென்றால் அவரை நாம் கட்டுப்படுத்த முடியாத நிலை நமக்கு ஏற்படும். 

குடிநோய் எப்படி ஒருவனுக்குள் தோன்றுகிறது? 
ஆரம்ப நிலையில் முதலில் அவர்கள் நண்பர்களிடம் செல்லும் பொழுதுஅவர்கள் அழுத்தம் கொடுத்தால் அவர்கள் அதற்கு சிறிதளவு ஆர்வம் காட்டி இது தவறல்ல என்று சிறிதளவு குடிப்பது இதுவே ஆரம்ப நிலை ஆகும். 

பிறகு ஒருவனுக்கு அதிக அளவு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும் போது அவர் தவறான பயன்பாடு மேற்கொண்டு குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றார். 

ஒருவனுக்கு உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக வலி ஏற்படும் போது அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதற்காக குடிப்பழக்கத்திற்கு செல்கின்றனர். 

ஒருவன் சிறிது சிறிதாக குடித்து பிறகு அவனின் கட்டுப்பாட்டை இழந்து தீவிர குடி பழக்கத்திற்கு ஆளாகி குடி நோய்க்கு அடிமையாகிறான். 

அதிகமாக மதுவினை குடிக்கும் பொழுது நமது உடல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு நமது உயிருக்கும் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுகிறது.எனவே அனைவரும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் இல்லை என்றால் அவரின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

1.குடிநோய் ஒரு நிரந்தரமான நோய்

ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு வாழ்நாள் முழுவதும் குடிநோயாளியே என்பது அதிர்ச்சிகர உண்மை.

மது மூளையில் THIQ∙-என்ற இரசாயன மாற்றத்தை உருவாக்கி, அந்த இரசாயனப் பொருள் மூளையில் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்தக் காரணமாகின்றது.

2. குடிநோய் ஒரு வளரும் நோய்

இது ஆரம்பக்கட்டம். நடுக்கட்டம், இறுதிக்கட்டம் என்ற நிலைகளில் வளரும் நோய்.

ஆரம்ப நிலை

ஆரம்பக்கட்டத்தில் மறதிநிலை, ஒளிந்திருந்து குடித்தல், மதுவை 'மடக் மடக்' என வேகமாகக் குடித்தல், மீண்டும் மீண்டும் மறதிநிலை மற்றும் பகலிலும் குடித்தல் போன்றவை அறிகுறிகள்.

நடுநிலை

நடுக்கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிகமாகக் குடித்தல், தனிமையில் குடித்தல், வன்முறைகளில் ஈடுபடுதல், தாழ்வுமனப்பான்மை கொள்ளுதல், வேலை இழப்பு, ப்பு, மது அருந்தும் பாணியை மாற்றுதல், சிறிதுகாலம் குடிக்காமலிருத்தல் போன்றவை அறிகுறிகள்.

இறுதிநிலை

இறுதிக்கட்டத்தில் விட்டு விட்டுக் குடித்தல், ஒழுக்கம் தவறுதல், வீண் சந்தேகம், மனப்பிரமைகள் தொற்றுதல்,உடல் உறுப்புகள் கட்டுப்பாட்டை இழத்தல் போன்றவை அறிகுறிகள்,

இன்னும் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தாலோ, மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தாலோ, அவர் மனநோயாளி ஆகலாம் அல்லது மரணமடையலாம்.

3. குடிநோயைக் குணப்படுத்த முடியாது 

குடிநோயைக் குணப்படுத்த மருந்துக்கள் இல்லை. ஆனால், இதனைக் கட்டுப்படுத்தலாம். எவ்வாறு சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாதோ, இதுவும் அதேபோல்தான். ஆனால், குடியை நிறுத்தி மதுவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

4. இது யாரையும் விட்டு வைக்காத நோய்

இது பரவலாகக் காணப்படும் நோய் என்று சொல்லலாம். ஏனென்றால் இது ஆண் - பெண், இனம், மொழி, உயர்ந்தோர் -தாழ்ந்தோர், படித்தோர் - படிக்காதோர், சிறியோர் - பெரியோர். இளையோர் - மூத்தோர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, குடிப்பவர்களை ஆட்கொள்ளும் நோய்.

குடிப்பவர்களில் 10 - 20 சதவீதத்தினர் குடிநோயாளிகளாகி விடுகின்றனர். ஆகையால் குடிப்பவர்கள் யாருமே, தான் ஒரு குடிநோயாளி ஆகப்போவதில்லை என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்