நமது உடல் ஐம்பூதங்களின் உட்பொருள்களால் ஆனது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய இந்த ஐம்பூதங்கள்தான், மனித உடலின் மூலப்பொருள்களாய் விளங்குகின்றன. எனவே இந்த ஐம்பூதங்களுக்கு உள்ள எல்லா சக்தியும், எல்லா மனிதர் உடலுக்கும் நிச்சயம் உண்டு
மனித உடல் ஆற்றல் வாய்ந்தது என்றால், யாரும். அதை மறுக்க முடியாது, மனித உடலின் விந்தையையும் செயல்படும் ஆற்றலையும் அழகாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் ஒன்பது அமைப்புகளாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது அமைப்புகளும் சேர்ந்து மனிதஉடலுக்கு ஆற்றலையும், வலிமையும் தருகின்றன.
1.எலும்பு மண்டலம் (Skeletal System)
2. தசை மண்டலம் (Muscle System)
3. உணவு மண்டலம் (Digestive System)
4. நரம்பு மண்டலம் (Nervous System
5. சுவாச மண்டலம் (Respiratory System)
6. இரத்த ஓட்ட மண்டலம் (Circulatory System)
7.நினநீர் மண்டலம் (Lymphatic System)
8. சுரப்பி மண்டலம் (Endocrine System)
9. இனப்பெருக்க மண்டலம் (Reproductive System)
1. எலும்பு மண்டலம்
ஒவ்வொரு கட்டிடத்திற்கும், அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் அவசியமாக இருப்பதுபோல மனித உடலமைப்புக்கும் எலும்புகள் இன்றியமையாத அங்கம் வகிக்கின்றன. மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளை தசைகள் இணைக்கின்றன. எலும்புகள் அசைவு பெற்று இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
2. தசை மண்டலம்
எலும்புகளை மூடி, சரியான உடலமைப்பைத் தருவது தசை மண்டலம். மனித உடலில் மொத்தம் 600 முக்கியத் தசைகள் உள்ளன. இந்தத் தசைகள் உடலில் உள்ள கைகள், கால்கள், பாதங்கள், விரல்கள், தலை போன்ற உறுப்புகளை இயக்குவதற்கு, ஊட்டச் சத்துகளையும், இரத்தத்தையும் கொண்டு செல்கின்றன.
3. நரம்பு மண்டலம்
எலும்புகளும், தசையும் தன்னிச்சையாக இயங்கிவிட முடியாது. மூளையிலிருந்து கொடுக்கப்படுகிற கட்டளைகளைத் தத்தம் உறுப்புச் செயல்பாட்டிற்கு கொண்டுவந்து. செயலாக்கத்திற்கு உதவி செய்வது 'நரம்பு மண்டலம்* ஆகும். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாசிப்பதற்கும். கண்கள் காதுகள் மூக்கு நாக்கு சுவையை உணர்வதற்கும் நரம்பு மண்டலம் முக்கியப் பங்காற்றுகிறது.
4. உணவு மண்டலம்
நாம் உணவை உண்ணும் ஆற்றலாக உடல்சத்தாக மாற்றுகின்ற பணியை உணவு மண்டலம் மேற்கொள்கிறது. உட்கொள்ளப்படும் உணவு எரிசக்தியாக, ஆற்றலாக மாற்றம் பெற்று, மனிதர் உழைப்பதற்கும், அன்றாடப் பணிகளை அயராது செய்வதற்கும் இந்த உணவு மண்டலம் பெரிதும் பயன்படுகிறது.
5. சுவாச மண்டலம்
என்னதான் உணவுச் வழங்கப்பட்டாலும். உயிர்க் சத்துகள் காற்றாகிய உடலுக்கு ஆக்சிஜன் இல்லையென்றால், மனிதர் வெறும் பிணம்தான். வளிமண்டலத்தில் தனியாக நமக்கு ஆக்சிஜன் மட்டும் கிடைப்பதில்லை. மற்ற பல வாயுக்களோடு கலந்துள்ள ஆக்சிஜனை மட்டும் தனியாகப் பிரித்து, உடலுக்குத் தேவையான வகையில் வழங்குகின்ற பணியைச் சுவாச மண்டலம் செய்கிறது.
6. இரத்த ஓட்ட மண்டலம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் அமைப்பு இரத்த ஓட்ட மண்டலம் ஆகும். இரத்தமானது நமது உடலின் பாய்மத்திசு ஆகும். இதில் சிவப்பு அணுக்கள், வெள்ளையணுக்கள், மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கும்.
சிவப்பணுக்கள் நமது சுவாசத்தின் மூலம் எடுக்கும் ஆக்சிஜனை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் ஆக்சிஜனின் படகு ஆகும்.
வெள்ளையணுக்கள் நமது உடலினுள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. நமது உடலின் போர்வீரன் ஆகும்.
இரத்தத் தட்டுக்கள் நமது உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அதை உறையவைத்து இரத்தக் கசிவிலிருந்து பாதுகாக்கிறது. இவை நமது உடலின் பாதுகாப்புப் படை.
இந்த இரத்தத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும். குறிப்பிட்ட அழுத்தத்துடன் சீராக அனுப்புவது நமது இதயமாகும். எனவே, மனிதர் எவ்வாறு ஒரு சமூக உயரினமோ, அதேபோல் இரத்த ஓட்ட மண்டலம் இதயம், நுரையீரல் மற்றும் நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் சார்ந்தது.
7. நினநீர் மண்டலம்
உணவுப் பரிமாற்ற மண்டலத்தின் வழியாக, உணவுச் சத்துக்கள் உடலிலுள்ள ஒவ்வோர் அணுவுக்கும் தனித்தனியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தச் சிறப்பான பொறுப்பான பணியை நினநீர் (Lymph) மண்டலம் செய்கிறது. இரத்த நாளங்களிலும், இரத்தக் குழாய்களிலும் சுரக்கும் நினநீர் எனப்படும் திரவம், முறையே தேவையான ஊட்டச்சத்துக்களால் ஒவ்வோர் அணுவையும் நனைக்கிறது.
8. சுரப்பி மண்டலம்
நமது உடலில் பல்வேறு சுரப்பிகளின் வழியாக ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் தத்தம் உடலுறுப்புகளுக்குப் பல்வேறு செய்திகளைக் கொண்டுசெல்லும் பணியைச் செய்கின்றன. ஒவ்வோர் உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் சுரந்து, உடலின் செயல்பாடுகள் சீராக்கப்படுகின்றன.
9. இனப்பெருக்க மண்டலம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலில் உள்ள செல்கள் மடிவதும், புதிய செல்கள் பிறப்பதுமான சுழற்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதன் ஒரு சிறப்பான அங்கம்தான் மனித இனப்பெருக்கம், தன்னைப் போன்றறொரு புதிய மனித உயிரைப் படைக்கும் ஆற்றல் இனப்பெருக்க மண்டலத்திற்கு உண்டு.