பறவைகள் வலசை போதல் என்றால் என்ன? What is Birds Migration?

பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

உணவு. இருப்பிடம். தட்பவெப்பநிலை மாற்றம். இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல்
  • .இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்க : தற்போது அழிந்து வரும் பறவை இனம் எது?

தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் *நாராய், நாராய், செங்கால் நாராய்' என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள 'தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

 கப்பல் பறவை:

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird). தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. 

பறவைகள் வேலை செய்யும் போது பருவநிலை இனப்பெருக்கம் போன்ற காரணங்களால் பறவைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெறுவது தான் நாம் செய்வதில் இருக்கிறோம் இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வாகும்.

இந்த காரணங்களால் தான் பறவைகள் வலசை போகின்றன! 

  • பறவைகள் பெரும்பாலும் தனது இருப்பிடங்கள் சரியாக இருப்பதில்லை எனவே சிறந்த உரைவிடத்தை தேடி அது இடம்பெறுகின்றன. சிறந்த மரம் மற்றும் காடுகள் நிறைந்த சூழல் சிறந்த குடில்கள் இணைப்பதற்கு பறவைகள் இடம் மாற்றம் செய்கின்றன. 
  • பறவைகள் பெரும்பாலும் பசுமை நிறைந்த சூழலை நோக்கி செல்கிறது. இதனால் தனது இனத்தை அது அடுத்த கட்டத்திற்கு தனது இனத்தினை தொடர செய்யவும் வாழ மாற்றம் செய்கின்றது. 
  • குளிர்காலம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் பறவைகளுக்கு கடும் குளிர் வெப்பம் பணிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த இடத்தை தவிர்த்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெறுகின்றன. 
  • பறவைகள் தனது இனப்பெருக்கத்திற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பாதுகாப்பான இடத்தை தேடி தனது முட்டைகளை இடுவதற்காக இடம் பெறுகின்றன. 
  • பறவைகள் ஒரு இடத்தில் உணவு இல்லை என்றால் வேறு இடத்திற்கு உணவு தேவைக்காக இடம் பெயர்ந்து செல்கிறது.
  • இதனால் இயற்கை வளம் அதிகரிக்கிறது.
பறவைகள் எப்படி திசையை கண்டறிகிறது?
  • பறவைகள் பெரும்பாலும் புவியின் காந்தப்புலத்தை வைத்து திசைனை கண்டறிகிறது. 
  • சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் மூலமாக திசையினை கண்டறிகிறது. 
  • நிலத்தின் வாசனை ஒலி மற்றும் சில அடையாளக் குறியீடுகளை வைத்து தனது திசையினை கண்டறிந்து இடம் பெயர்கின்றது. 
  • பறவையின் உள்ளுணர்வு சார்ந்த உணர்வுகளை வைத்து அது தங்களின் இருப்பிடத்தை கண்டறிகிறது.
சுற்றுச்சூழலின் பயன்கள்: 
  • பறவைகள் இடம் பெறுவதால் விதைப்பரவல் அதிகரிக்கிறது. இதன் மூலம் சுற்றுச் சழலுக்கு அதிகளவு நன்மை உள்ளது. 
  • பறவைகள் இடம்பெயர்வதால் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
  • பசுமை வள மேம்பாட்டுக்கு அதிகளவு உதவியாக உள்ளது. 
  • பறவைகள் இடம் பெறுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை சரி செய்ய உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்